வேலைக்கார பெண்ணையும், மகளையும் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சவுதி அரேபியா அதிகாரி!
டெல்லி: நேபாள நாட்டை சேர்ந்த 44 வயது பெண்ணையும் அவரது 20 வயது மகளையும் செக்ஸ் அடிமைகளாக நடத்தி வந்த சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த அதிகாரி மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளதோடு மட்டுமின்றி, இந்தியா-சவுதி நாட்டு உறவிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ளது. இதில் பணியிலுள்ளார் செயலாளர் என்ற மட்டத்திலான ஒரு 'உயர் அதிகாரி'. இந்த அதிகாரியின் வீடு குர்கான் பகுதியிலுள்ளது. இந்த வீட்டில் வேலை செய்வதற்காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணியமர்த்தப்பட்டனர்.

ஆனால், சில நாட்களிலேயே அதிகாரியின் குரூர முகம் வெளிச்சத்துக்கு வந்தது. வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமைகளாக நடத்தியுள்ளார். சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த இரு பெண்களையும் விருந்தாக்கியுள்ளார்.
அதேநேரம், இதையெல்லாம் தெரிந்திருந்தும், சவுதி அதிகாரியின் மனைவியோ, காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக, கணவரிடம் செக்ஸ் அடிமைகளாக இருக்கும் அந்த பெண்களை பகல் நேரத்தில் பாத்திரம் கழுவ செய்வது, துணி துவைக்க செய்வது போன்ற வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
பகலில் அதிகாரியின் மனைவியிடமும், இரவில் அதிகாரி மற்றும் அவரது நண்பர்களிடமும் அடிமையாக சிக்கி கட்த 4 மாதங்களாக அல்லல்பட்டனர் அவ்விரு பெண்களும். இந்நிலையில் என்.ஜி.ஓ ஒன்றின் தகவல் உதவியுடன், டெல்லி போலீசார் இன்று அந்த அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில், சவுதி அதிகாரி மற்றும் அவரது மனைவி மற்றும் பலாத்காரம் செய்த நண்பர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவுடன், இந்தியாவுக்கு நல்லுறவு உள்ள நிலையில், இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, ஆதாரங்களை வலுவாக சேகரித்த பிறகு, கைது நடவடிக்கை இருக்கலாம் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications