கணக்கில் வைக்கவே பணம் இல்லாதவர்களிடம் இருந்து ரூ.1,771 கோடி வசூல்... எஸ்பிஐயின் அடடே அபராதம்!
வங்கிக் கணக்கில் போதிய இருப்புத் தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ ரூ.1,771 கோடி வசூல் செய்துள்ளது.
டெல்லி : வங்கிக் கணக்கில் போதிய பணம்இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆயிரத்து 771 கோடி அபராதமாக வசூலித்துள்ளது.
2017ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வங்கிக் கணக்கில் போதிய அளவு பணம் இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1,771 கோடியே 77 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் காலாண்டு வருமானமானத்தை விட அதிகமாகும்.
எஸ்பிஐயின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு வருமானம் என்பது ரூ. 1,581 கோடி தான், ஆனால் அதை விட அதிக அளவு அபராதமாகவே வசூலிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2017/18ம் நிதியாண்டில் மட்டுமே ரூ. 1771.77 கோடி அபராம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

போதிய இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம்
2016-17 நிதியாண்டில் வங்கிக் கணக்கில் பணம் பராமரிக்காதவர்களிடம் எஸ்பிஐ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்த புதிய நடைமுறையை எஸ்பிஐ கொண்டு வந்தது.

இந்தியாவின் முன்னணி வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு நாடு முழுவதும் 42 கோடி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இவற்றில் 13 கோடி பேர் அடிப்படை வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் யோஜனா திட்டத்திற்காக கணக்கு தொடங்கியவர்கள். இந்த 13 கோடி மக்களுக்கு மட்டுமே அபராதம் வசூலிப்பில் இருந்து விலக்கு உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதிக வசூல்
இதே போன்று பஞ்சாக் நேஷனல் வங்கியும் 2017 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 97.34 கோடி அபராதம் வசூலித்துள்ளது. இதுவே இந்த வங்கி வசூலித்த அதிக அபராதத் தொகை.

பணமே இல்லை அப்புறம் ஏன் அபராதம்?
வங்கிக் கணக்கில் போதுமான வைப்புத் தொகை கூட வைக்க முடியாத வாடிக்கையாளர்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலித்துள்ளது கடும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. பணமே வைத்திருக்க முடியாதவர்களிடம் இருந்தா அபராதம் வசூலிப்பது என்று பலரும் இந்த செய்தியை கேட்டு சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications