சிபிஐக்கு எதிரான தீர்ப்பு : அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
Subscribe to Oneindia Tamil

சிபிஐ அமைப்பானது சட்டப்பூர்வமான அமைப்பே அல்ல என்று அண்மையில் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசை மட்டுமின்றி நீதித்துறையையே உலுக்கியது.
இந்த தீர்ப்பு நடைமுறையில் இருக்குமேயானால் பல்வேறு வழக்குகளின் கதி என்னவாகும் என்ற குழப்பமும் ஏற்பட்டிருந்தது. உடனடியாக மத்திய அரசு இதற்கு தடை கோரியது. உச்சநீதிமன்றமும் குவஹாத்தி தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் சிபிஐ அமைப்பும் குவஹாத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்று அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications