நீதிமன்றங்களில் தேசிய கீதத்தை கட்டாயமாக்க மனு- சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும். அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேசியக் கொடியை திரையிட வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது.
தேசிய கீத வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைத்து வாயில் கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மக்களில் பலருக்கு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்றே தெரியவில்லை. தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மரியாதை செலுத் துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதனிடையே நீதிமன்றங்களில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications