For Daily Alerts
Just In
ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
டெல்லி: ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது என மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே சிகிரி, என்.வி. ராமண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது ரெட் ஒயின் அருந்துவது இதயத்திற்கு நல்லது என ஆய்வறிக்கை சொல்கிறது.
குறைந்த அளவு மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்பதற்காக மட்டும் நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த முடியாது என கூறி அஸ்வினியின் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Comments
English summary
The Supreme Court on Friday dismissed Bharatiya Janata Party (BJP) leader Ashwani Upadhaya’s plea, seeking a complete ban on liquor across the nation.
Story first published: Friday, September 30, 2016, 14:51 [IST]