கிரிமினல் பின்னணி அமைச்சர்கள் நீக்கம் குறித்து பிரதமர்தான் முடிவெடுக்க முடியும்: சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்களை நீக்குவது குறித்து பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல்வர்களே முடிவெடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று கோரி மனோஜ் நருலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிக்கமாட்டோம் என்றுதான் அரசியல் சாசனப்படி பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல்வர்கள் உறுதி மொழியேற்கின்றனர்.

SC refuses to disqualify ministers facing criminal charges

அதே நேரத்தில் பிரதமரின் அதிகாரங்களை உச்சநீதிமன்றம் மறுவரையறை செய்ய முடியாது. அதனால் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களை நீக்கும் முடிவை பிரதமர் மற்றும் முதல்வர்களே எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்வது என்ன?

  • அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தால் முடியாது. அது குறித்துபிரதமர் மற்றும் முதல்வர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
  • அதே நேரத்தில் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிறவர்கள் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை எதிர்கொள்வோரை அமைச்சர்களாக நியமிப்பதை பிரதமர் தவிர்க்கலாம்.
  • ஊழல் என்பது தேசத்தின் எதிரி. அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் என்கிற முறையில் அத்தகைய விரும்பத்தகாத நபர்களை அமைச்சர்களாக நியமிக்காமல் இருக்கலாம்.
  • இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், ஒருவர் எம்.பி.யாகிவிட்டாலே அவரை பிரதமர் விரும்பினால் அமைச்சராக நியமிக்க முடியும் என்று வாதிடப்பட்டது.
  • இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தார்மீக அடிப்படையிலும் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடனும் பிரதமரும் மாநிலங்களின் முதல்வர்களும் செயல்படுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

மோடி அமைச்சரவையில் கிரிமினல் பின்னணி

  • பிரதமர் மோடி அமைச்சரவையில் கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்கள் மொத்தம் 14 பேர்.
  • மத்திய அமைச்சர் உமாபாரதி மீது மட்டும் 13 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • உமாபாரதிக்கு அடுத்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+