முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு எதிராக தமிழகம் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 3–ல் விசாரணை!
டெல்லி: முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஜூலை 3-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.
முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதில் கேரளா மும்முரமாக இருக்கிறது. தற்போதைய அணைக்கு 500 அடிக்கு கீழ் உள்ள வல்லக்கடவிற்கு செல்லும் பாதையில் 15 இடங்களில் இதற்காக ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் இந்த பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதாக கூறப்படும் பகுதியில் ஆழ்துளை எந்திரங்களை கொண்டு பணிகளை தொடங்கி இருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல். இதனால் தேசிய வனவிலங்கு வாரியம் 31.12.2014 அன்று வழங்கிய அனுமதியின் அடிப்படையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டத் தொடங்குவதற்கான ஆய்வு பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கடந்த மாதம் 12-ந் தேதி மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இம் மனுவை உடனடியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
தற்போது இந்த மனு ஜூலை 3-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications