முகத்தில் பிளாஸ்டிக் பேக்... கை நரம்பு மணிக்கட்டு அறுப்பு - பள்ளி மாணவி மர்ம மரணம்
கொல்கத்தாவில் பிரபல பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் முகத்தில் கவர் கட்டப்பட்டு கையில் மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் பற்றி போலீசார
கொல்கத்தா: தேர்வில் பெயிலாகும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து உயிரிழப்பது வழக்கமாக செய்திகளில் அடிபடும் விசயம்தான். ஆனால் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும். கொல்கத்தாவில் பிரபல பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். அவரது முகம் பாலிதீன் கவரினால் மூடப்பட்டிருந்தது. மாணவியின் மரணம் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த அந்த மாணவி வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவர். வகுப்பில் மதியம் சாப்பிட்டு விட்டு கை கழுவப் போன அந்த சிறுமி திரும்ப வரவில்லை. மாணவியின் தோழிகள் பாத்ரூமிற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார். கையின் மணிக்கட்டில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து போயிருந்தது. சிறுமியின் முகம் பாலிதீன் கைகளால் கட்டப்பட்டிருந்து.

மரணத்திற்கு காரணம் மன அழுத்தம்தான் என்று சிறுமியின் அருகே கிடந்த தற்கொலை கடிதம் கூறுகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே சரியான தூக்கமில்லை. மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்று எழுதியிருக்கிறார். சில நேரங்களில் மன அழுத்தம் கொலை செய்ய தூண்டுகிறது. கொல்கத்தாவில் பள்ளி மாணவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் புத்திசாலித்தனமான அந்த மாணவியின் மரணம் உடன் படிக்கும் மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளதால் விசாரணை நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. கைரேகை தடயங்களைக் கொண்டும், சிசிடிவி ஃபுட்டேஜ்களைக் கொண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெயிலாகும் மாணவர்கள், தேர்வு சரியாக எழுதாத மாணவர்களுக்கு மட்டுமல்ல முதல்மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப உளவியல் தீரியான சிகிச்சை அளித்தால் தற்கொலைகளை தடுக்க முடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications