இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் நடவடிக்கை
குவஹாத்தி: அஸ்ஸாமில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படையின் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன என்பது குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று பகல் ஏ.என். 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் மெஞ்ச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி புறப்பட்டுச் சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது விமானம் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை என்கின்றன விமானப் படை வட்டாரங்கள்.
மாயமான விமானத்தை தேடும் பணிகளில் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர், சி-130 ஜே, ஏ.என்.32 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தரை வழியாகவும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டு வருகிறார்.
ஏ.என்.32 ரக போர் விமானம் ரஷ்யவின் தயாரிப்பாகவும். விமானப் படை வீரர்களை மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு சென்ன தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து இதே ரக விமானம் 29 பேரும் அந்தமான் தீவுகளுக்கு சென்று மாயமானது.
அதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் இதே ஏ.என்.32 ரக விமானம் மலை சிகரம் ஒன்றில் மோதில் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த ரக விமானம் 3-வது முறையாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications