நீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா?
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்காளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள்.
அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.

ஏன் இந்த சட்டம்
இந்த சட்டத்தை கொண்டு வந்து பிரிட்டிஸ்கார்கள் முக்கிய ஒரு விஷயத்தை குறிக்கோளாக கொண்டே செயல்பட்டார்கள். கிருஸ்துவ முறைப்படி, ஓரினசேர்க்கை முழுக்க முழுக்க தவறானது. இதனால் அப்போது அவர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து எல்லா நாடுகளிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது கடவுளுக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.

என்ன நடக்கிறது
ஆனால் இது எல்ஜிபிடி (LGBT)எனப்படும் லெஸ்பியன் (பெண்பால் ஈர்ப்பு கொள்ளும் பெண்கள்), கே (ஆண்பால் ஈர்ப்பு கொள்ளும் ஆண்கள்), பை செக்ஸுவல் (இரண்டு பால் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்), டிரான்ஸ்ஜெண்டர் (திருநங்கைகள், திருநம்பிகள்) ஆகிய பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த சட்டம் பல ஆண்டுகளாக ஏவப்படுகிறது. சாலையில் செல்லும் திருநங்கை ஒருவர் கைது செய்யப்படுவது கூட இந்த சட்ட பிரிவின் கீழ்தான். பல அடுக்குமுறைகள் இந்த சட்ட பிரிவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மாற்றம் என்ன நடக்கும்
தற்போது இந்த சட்ட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாமல் மக்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படும். உலக அளவில் இந்தியாவின் பெயர் நல்ல நிலையை அடையும். ஆண்களும், பெண்களும்., திருநங்கைகளும், திருநம்பிகளும் அவர்கள் விருப்பம் போல் கல்யாணம் செய்ய முடியும், வாழ முடியும். இதனால் பல வருட அடுக்குமுறை ஒழியும்.

எத்தனை வருடம்
இது இப்போது மாடர்ன் உலகத்தால் வந்த கோரிக்கை என்று யாரும் நினைக்க கூடாது. 90களிலேயே இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. 30 வருடமாக இதுகுறித்து பலர் பேசியும், போராடியும், எழுதியும் இருக்கிறார்கள். தற்போது 377 சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், இந்த் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications