முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேர்... இதுவரை நடக்காத கொடூரம்!
திருப்பதி: ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேருக்கு முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்துள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேஷன், ‘ஆந்திர போலீசார் தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப் படுத்தவே முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார், தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றனர். செம்மரக்கட்டைகளை கடத்தியதாகவும், தடுக்க முற்பட்ட தங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது முன்கூட்டியே திட்டமிட்ட என்கவுண்டர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு என்கவுண்டர் என்ற பெயரில் ஒரே இடத்தில் 20 பேர் கொல்லப்பட்டது இல்லை. அதுவும் ஆயுதம் எதுவும் இல்லாதவர்கள் சுடப்பட்டுள்ளனர். அதனால் தான் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமும் ஆந்திர அரசிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளது. ‘தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது' என மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேரின் உடல் ஓரிடத்திலும், மீதமுள்ள 9 பேரின் வேறொரு இடத்திலும் கிடந்தது. அதில், 9 பேர் சடலங்கள் இருந்த இடத்தில் 7 பேர் முகத்திலும், பின்புறத்தில் கழுத்திலும் சுடப்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும், பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. சிலரது வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. தோல் உரிந்திருந்தது. இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
என்கவுண்டரில் கொல்லப் பட்டிருந்தால் தீக்காயங்கள் ஏற்பட்டது எவ்வாறு எனக் கேள்வி எழுந்துள்ளது. முன்கூட்டியே தமிழக தொழிலாளர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று, அவர்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டி ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர் என பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications