"மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பலாத்காரம்தானே?”- உச்ச நீதிமன்றம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மனைவியின் அனுமதி இல்லாமல் உறவு கொள்வது எப்படிக் குற்றமோ அதே போல் மைனர் பெண் மனைவி என்பதாலேயே அப்பெண்ணிடம் உறவு கொள்வதும் பலாத்காரத்திற்கு சமமான ஒன்றுதானா என்று உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வியை எழுப்பியுள்ளது.

"இண்டிபன்டென்ட் தாட்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

Sex with minor wife no rape? SC impleads NCW

அம்மனுவில், "15 வயது முதல் 18 வயது வரை உள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்த நபர் ஒருவர் அப்பெண் தனது மனைவியாகவிட்டதால் உறவு கொள்வது ஏற்புடையதல்ல. மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பலாத்காரமே என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் 375 ன் கீழ் ஒரு ஆண் தன் மனைவிக்கு 15 வயதுக்கு மேல் ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டப் பிரிவுகள் 14,15, 21 ஆகியனவற்றிற்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸோ சட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கு நேற்று நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய மகளிர் ஆணையம் இவ்வழக்கில் தேவையான விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன், மைனர் பெண் மீதான உறவு பலாத்காரமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+