வாரணாசி கங்கா ஆரத்தியில் மோடியுடன் பங்கேற்ற ஜப்பான் பிரதமர்..!
டெல்லி: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.
அவரது இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வற்புறுத்துவது குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர், ரூ.97 ஆயிரத்து 636 கோடி மதிப்பீட்டில் புல்லட் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதேபோல ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வது, சிவில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. மேலும், அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ‘இந்தியா-ஜப்பான் 2025 தொலை நோக்கு திட்டம்' என்னும் கூட்டறிக்கையையும் இரு நாட்டுத்தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரனாசிக்குச் சென்ற அபே, தசாஸ்வமேத படித்துறையில் நடைபெற்ற ' கங்கை ஆரத்தி' எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இனைந்து கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியாவில் தனது மூன்று நாள் அரசு முறைப்பயனத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே இன்று நாடு திரும்பினார். அவரை ஜப்பான் தூதரக அதிகாரிகளும், மத்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்காவும் டெல்லி விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications