கள்ளக்காதலனுடன் சேர்த்துப் பார்த்து விட்ட தம்பியை.. உயிருடன் எரித்துக் கொன்ற அக்கா!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உ.பி. மாநிலம் புலந்த் சாகர் மாவட்டத்தில் தன்னையும், தனது கள்ளக்காதலனையும் சேர்த்துப் பார்த்து விட்ட தம்பியை உயிருடன் தீவைத்துக் கொளுத்தி விட்டார் அவனது அக்கா.

12 வயதேயான அந்த சிறுவன் துடிக்கத் துடிக்க உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலந்த்சாகர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு தாயும், மகளும் பாலியல் பலாத்கரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பாதிப்பே இன்னும் விலகாத நிலையில் தம்பியை சொந்த அக்காவே உயிருடன் வைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sister burns her 12 year old brother

எரித்துக் கொள்வதற்கு முன்பாக அந்த சிறுவனை அவனது அக்காவும், கள்ளக்காதலனும் சேர்ந்து குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவனைக் கொன்று எறித்து விட்டனர்.

லலித் என்ற அந்த 12 வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லை. வீட்டின் உள்ளே சத்தம் கேட்டுள்ளது. என்ன என்று பார்த்தபோது, அக்காவும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இன்னொரு வாலிபரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்துள்ளான் சிறுவன்.

சிறுவனின் அக்காவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். எங்கே தனது தம்பியை விட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுவானே என்ற அச்சத்தில் அவரும், அவரது கள்ளக்காதலரும் சேர்ந்து சிறுவனை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் தீவைத்துக் கொன்று விட்டனர்.

சிறுவன் தப்பி விடாமல் தடுப்பதற்காக அவனது கை, கால்களையும் கட்டிப் போட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளனர் இருவரும். பரிதாபமாக உயிரிழந்த சிறுவனை 2 வயதுதான் அந்தப் பெண் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+