அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் மீண்டும் பயங்கரம்- துப்பாக்கி சூடு- 6 பேர் பலி!
குவஹாத்தி: அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இன்று இரு மாநில எல்லையில் நிகழ்ந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்துடன் மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகியவை மாநில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

எல்லை பிரச்சனை
அண்மையில் அஸ்ஸாம், மேகாலயா இடையேயான எல்லை பிரச்சனை உக்கிரமாக வெடித்தது. கடந்த ஆண்டு அஸ்ஸாம், மேகாலயா மாநில போலீசார் இடையே பெரும் மோதல் நடந்தது. அப்போது இருதரப்பும் எல்லை யுத்தம் போல துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். இதனால் மேகாலயா மீது அஸ்ஸாம் பொருளாதார தடை விதித்தது.

அமித்ஷா தலைமையில் கூட்டம்
இதன்பின்னர் இரு மாநில எல்லை பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தலையிட்டது. ஒருவழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்ற எல்லை தீர்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு இரு மாநில முதல்வர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

மீண்டும் எல்லை மோதல்
தற்போது மீண்டும் அஸ்ஸாம், மேகாலயா மாநில எல்லையில் மோதல் வெடித்துள்ளது. அஸ்ஸாமில் இருந்து மேகாலயா நோக்கி மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று இன்று காலையில் சென்று கொண்டிருந்தது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் லாரி ஓட்டுநர் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன் 3 பேரையும் அஸ்ஸாம் வனத்துறையினர் சிறைபிடித்தனர்.

இருதரப்பு மோதல்
இந்த தகவல் மேகாலயா மாநிலத்தில் காட்டுத் தீயாக பரவியது. இதனையடுத்து பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அஸ்ஸாம் வனத்துறையினரை சூழ்ந்து கொண்டது. அப்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அக்கும்பல் வலியுறுத்தியது. இதனால் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது.

துப்பாக்கி சூடு
இந்த மோதலைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 6 பேர் பலியாகினர். இதனால் அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications