காலில் கட்டி- அவதிப்பட்ட அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு காலில் ஏற்பட்ட கட்டியால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கடந்த வாரம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கல்வித்துறை செயலாளர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் காலில் ஏற்பட்ட கட்டியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து டெல்லி குர்கானில் உள்ள மிதந்தா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காலில் ஏற்பட்ட கட்டியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவர் குணம் அடைந்து விட்டதாகவும், விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications