நாய், பூனையெல்லாம் காரில் ஜம்முனு போகுது.. நான் போகப்படாதா.. லிப்ட் கேட்ட பாம்பு!
டெல்லி: நாய், பூனையெல்லாம் காரில் போகும்போது நாம் மட்டும் போகக் கூடாதா என்ற கேள்வியுடன் ஓடும் காரில் பாம்பு ஒன்று லிப்ட் "கேட்டதால்" டிரைவர் பீதியில் உறைந்து போனார்.
நீண்ட தூரம் காரில் பயணிக்கும் போது விசித்திரமான மனிதர்களை சந்திக்காமல் இருப்பது அரிதிலும் அரிதானதாகும். திகிலூட்டக் கூடிய லிப்ட் கேட்கும் கதைகள் நாம் கேட்டிருப்போம். ஏன் அனுபவமும் இருக்கலாம்.
ஆனால் சற்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் செல்லும் நீண்ட தூர பயணத்தின்போது மனிதர் ஒருவர் லிப்ட் கேட்பதற்கு பதிலாக ஒரு பாம்பு கேட்டால் எப்படி இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா?
நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இதுதொடர்பான வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது, காரில் டிரைவர் சீட்டின் ஜன்னலுக்கு அருகே பேனட் வழியாக ஒரு பெரிய பாம்பு மெல்ல ஊர்ந்து வந்து சைட் கண்ணாடியை கொட்டிக் கொட்டி உள்ளே வரப் பார்த்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்த வீடியோ வைரலாகியுள்ளது. நீங்களும் பாருங்க!