நல்ல காரியங்கள் செய்யும் போது தடைகள் வரத்தான் செய்யும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
டெல்லி: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாழும் கலை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட உலக கலாசார திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் நேற்று துவங்கிய உலக கலாசார திருவிழா நாளை வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இசை, நடனம் என களைகட்டிய கலாசார திருவிழாவை கொட்டும் மழையிலும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேதுகையில், சிலர் இந்த உலக கலாசார திருவிழாவை தனி ஒரு அமைப்பின் நிகழ்ச்சி என்று கூறினார்கள். அது உண்மைதான்.
ஏனெனில், இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் எனது குடும்பம். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாத ஒருவர் இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தே இருப்பார். ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தை செய்யும் போது பல தடைகள் வரத்தான் செய்யும். ஆனால், தவறான காரியம் ஒன்றை செய்யும் போது எந்த தடையும் வராது.
ஆனால், நாம் கடைசியில் அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல இனிமையான முடிவை பெற்றிருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது எங்கள் டி.என்.ஏ.விலேயே உள்ளது. நாங்கள் இயற்கையை நேசிக்கிறோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த விழா சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, யமுனை நதியை காப்போம் என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.5 கோடி அபராதத்தை விழா தொடங்குவதற்கு முன்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications