வங்கதேசத்தவர் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட பி.எஸ்.எப். படையினருக்கு ராஜ்நாத்சிங் பிறப்பித்த 'கட்டளை
டெல்லி: எல்லையில் மாடுகள் கடத்தலை முற்றிலுமாகத் தடுத்தால் வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதையே நிறுத்த வேண்டிய நிலைமை வரும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம்- வங்கதேசம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.) முகாம்களை கடந்த புதன்கிழமையன்று ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். ஆனால் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமலேயே ராஜ்நாத் பயணம் மேற்கொண்டிருந்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா சீறியிருந்தார்.

இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ராஜ்நாத்சிங் பேசியிருந்ததாவது:
எல்லையில் மாடுகள் கடத்தலைத் தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை 30% உயர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக கண்காணிப்பை மேற்கொண்டால் 70%-80% விலை உயர்ந்துவிடும்.
வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறி உண்பதையே கைவிடும் நிலைமையும் உருவாகும் என்று கூறியுள்ளார்.
நமது நாட்டில் பொதுவாக மாடுகளின் வாழ்நாள் காலம் 15 முதல் 20 ஆண்டுகள். பொதுவாக மாடுகள் தங்கள் வாழ்நாள் காலம் முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொடுப்பதை நிறுத்தி விடும்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் அடிமாடுகள் வங்கதேசத்துக்கு கடத்தப்படுகிறது. இவற்றை முற்றிலுமாக நிறுத்தினால் அந்த அடிமாடுகளுக்கான செலவுக்கு ரூ1.25 கோடி. இதில் அரசாங்கத்தின் பங்களிப்பாக ரூ31.250 கோடியாக இருக்கும் என்கின்றனர் தொழில்துறையினர்.
அதாவது ரூ31 ஆயிரம் கோடியை இந்தியா செலவு செய்தாவது வங்கதேசத்தவர் மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்கிறாரோ ராஜ்நாத் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications