வங்கதேசத்தவர் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட பி.எஸ்.எப். படையினருக்கு ராஜ்நாத்சிங் பிறப்பித்த 'கட்டளை
டெல்லி: எல்லையில் மாடுகள் கடத்தலை முற்றிலுமாகத் தடுத்தால் வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதையே நிறுத்த வேண்டிய நிலைமை வரும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம்- வங்கதேசம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.) முகாம்களை கடந்த புதன்கிழமையன்று ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். ஆனால் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமலேயே ராஜ்நாத் பயணம் மேற்கொண்டிருந்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா சீறியிருந்தார்.

இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ராஜ்நாத்சிங் பேசியிருந்ததாவது:
எல்லையில் மாடுகள் கடத்தலைத் தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை 30% உயர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக கண்காணிப்பை மேற்கொண்டால் 70%-80% விலை உயர்ந்துவிடும்.
வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறி உண்பதையே கைவிடும் நிலைமையும் உருவாகும் என்று கூறியுள்ளார்.
நமது நாட்டில் பொதுவாக மாடுகளின் வாழ்நாள் காலம் 15 முதல் 20 ஆண்டுகள். பொதுவாக மாடுகள் தங்கள் வாழ்நாள் காலம் முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொடுப்பதை நிறுத்தி விடும்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் அடிமாடுகள் வங்கதேசத்துக்கு கடத்தப்படுகிறது. இவற்றை முற்றிலுமாக நிறுத்தினால் அந்த அடிமாடுகளுக்கான செலவுக்கு ரூ1.25 கோடி. இதில் அரசாங்கத்தின் பங்களிப்பாக ரூ31.250 கோடியாக இருக்கும் என்கின்றனர் தொழில்துறையினர்.
அதாவது ரூ31 ஆயிரம் கோடியை இந்தியா செலவு செய்தாவது வங்கதேசத்தவர் மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்கிறாரோ ராஜ்நாத் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications