டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனை கைது செய்ய தடை நீடிப்பு- 30ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உத்தரவு
டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் சி.பி.ஐ. முன்பு நவம்பர் 30-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ. கைது செய்வதற்கான தடை நீடிக்கிறது.
2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு 6 வார இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத காரணத்தால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மேல்முறையீடு செய்தார்.
இதை ஏற்று தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இவ்வழக்கில் தயாநிதி மாறன் தரப்பும், சி.பி.ஐ. தரப்பும் அடுத்தடுத்து கூடுதல் விளக்கங்களை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தன. தயாநிதி மாறனை 'காவலில் வைத்து' விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சி.பி.ஐ. விசாரணைக்காக நவம்பர் 30-ந் தேதி தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை தயாநிதி மாறனிடம் சி.பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம். சி.பி.ஐ. அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு தயாநிதி மாறன் செல்ல வேண்டும்.
ஆனால் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.ஐ. கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதாவது தயாநிதி மாறனை கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ. கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications