புதிய பஞ்சாயத்து... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சை மீண்டும் லைவ்வாக ஒளிபரப்பிய டிடி நியூஸ்
மும்பை: மத்திய அரசின் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவவர் மோகன் பகவத்தின் பேச்சு மீண்டும் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டி பேசினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் செய்தி அடிப்படையிலேயே அந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக டி.டி. நியூஸ் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் டி.டி. நியூஸ் தொலைக்காட்சியில் மோகன் பகவத்தின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications