For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீநகர் ஏர்போர்ட் அருகே உள்ள பிஎஸ்எப் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: விமானங்கள் ரத்து

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமான நிலையம் அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமிற்குள் புகுந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமிற்குள் இன்று காலை 4.30 மணி அளவில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள்.

Suicide attack on BSF camp near Srinagar airport: Terrorist killed

பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடித்தி வருகிறார்கள். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான், வீரர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் சீல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

English summary
Terrorists carried out a suicide attack on a BSF camp near the Srinagar international airport early Tuesday morning. It is reported that there were three to four terrorists at the attack site. One terrorist has been killed while three BSF jawans have been injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X