சென்ச்சுரி போட்ட வெயில்: அப்படியே 'ஷாக்' ஆகி நிற்கும் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூரில் வெயில் சென்ச்சுரி போட்டுள்ளது மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.
குளு குளு என்று இருக்கும் பெங்களூரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை காலம் துவங்கிவிட்டது. முன்கூட்டியே கோடை காலம் துவங்கியது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர்களால் வெயில் கோரத்தாண்டவம் ஆடுவதை பார்த்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. கோடையில் நாங்கள் ஸ்வெட்டர் போன்று திரிந்த காலம் போய் தற்போது வெயிலை தாங்க முடியாமல் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டியுள்ளதே என்று வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் வெயில் சென்ச்சுரி போட்டுள்ளது. பெங்களூரில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் சென்ச்சுரி போட்டு வரும் நிலையில் பூங்கா நகரமான பெங்களூரில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது மக்களை வியக்க வைத்துள்ளது.
ஏற்கனவே வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அஸ் உஸ் என்று புலம்பி வருகையில் சூரியன் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது பெங்களூர்வாசிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது. பெங்களூரில் கோடையிலும் சாரலும், சில்லென்று காற்றுமாக இருந்த காலம் போய் அனல் காற்று வீசி மக்களை வறுத்தெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications