சுனந்தாவின் மர்ம மரணம் திட்டமிட்ட படுகொலை: சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டு
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என குற்றஞ்சாட்டியுள்ளார் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன் தனது கணவரும், மத்திய அமைச்சருமான சசிதரூருக்கு தொடர்பு உள்ளது என டுவிட்டர் மூலம் தனது குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார் அவரது மனைவி சுனந்தா. தொடர்ந்து இது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நேற்று முன்தினம், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சுனந்தா.

நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை வெளிவர இரண்டு தினங்கள் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், சுனந்தாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட படுகொலை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தலைவர் கூறியிருப்பதாவது :-
'அவரது உடலில் உள்ள காயங்கள், இந்த வழக்கு போகும் பாதை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலையாகவேத் தெரிகிறது. என்ன உண்மை என்பதை நாம் அறிய வேண்டும். யார் அவரைப் பாதித்தது, காயப்படுத்தியது, யாரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும் ' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications