நோய் வராமல் இருக்க சூடு போடும் விநோதம்... ஒடிசாவில் 25 குழந்தைகளுக்கு சித்ரவதை!
குழந்தைகளுக்கு நோய் வராமல் இருப்பதற்காக ஒடிசாவில் பின்பற்றப்படும் விநோதமான வழக்கத்தில் 25 குழந்தைகளுக்கு சூடு போடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
டென்கனல்: ஒடிசாவின் டென்கனல் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் விநோத வழக்கத்தில் 25 குழந்தைகளுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒடிசாவின் டென்கனல் மாவட்டம் மத்கர்கோலா பஞ்சாயத்தில் குழந்தைகள் எந்த நோயும் வராமல் இருக்க அவர்களுக்கு சூடு போடும் விநோத வழக்கம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மஹர சங்கராந்திக்கு அடுத்த நாள் இந்த சூடு போடும் நிகழ்ச்சியானது நடைபெறும். இதற்காக பெருமளவிலான மக்கள் தோரியா சந்தா கிராமத்தில் உள்ள பூபன் பகுதிக்கு ஆண்டுதோறும் பலர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இதே போன்று இந்த ஆண்டில் வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் வரை என மொத்தம் 25 குழந்தைகளுக்கு சூடு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று மத்கர்கோலா நாட்டாமை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு இது போன்று சூடு போடும் நிகழ்வு நடப்பது தமக்கு தெரியாது என்றும், உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டு சட்ட விரோதமாக குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவேன் என்று ஊர்நாட்டாமை கூறியுள்ளார்.
ஆனால் இது தங்களின் முன்னோர்கள் கடை பிடித்து வந்த வழக்கம் என்றும், அதையே தான் ஒவ்வொரு ஆண்டும் மஹர சங்கராந்திக்கு அடுத்த நாள் சூடு போடு வழக்கமாக தொடர்வதாகவும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications