தொடங்கியது விவசாயிகள் 10 நாள் வேலைநிறுத்தம்: 8 மாநிலங்களில் காய்கறி, பால் விநியோகம் பாதிப்பு
8 மாநிலங்களில் விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மும்பை : மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தில் 8 மாநிலங்களில் காய்கறி, பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமாகலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக்கோரியும், கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேர் நினைவு தினத்தையொட்டியும் விவசாயிகள் 10 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் மட்டுமல்லாது காய்கறி உற்பத்தியாளர்கள், பால் விற்பனையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகளை குப்பையில் கொட்டியும், பாலை கீழே ஊற்றியும் இன்று போராட்டத்தை துவங்கினர். மேலும், கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு எந்த விளை பொருட்களையும் அனுப்பப் போவது இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Punjab: Farmers spill milk on the road during their 10 days 'Kisan Avkash' protest, in Ludhiana's Samrala (Earlier visuals) pic.twitter.com/rh7Fp5uVnl
— ANI (@ANI) June 1, 2018
விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட்களுக்கான குறைந்த அளவு ஆதார விலையை உயர்த்துவது,உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து உள்ளார்கள். போராட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே பல்வேறு நகரங்களில் காய்கறித் தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. இந்தப் போராட்டம் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்தால், மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications