போபர்ஸ் ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அக்டோபரில் மீண்டும் விசாரணை
இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் வழக்கை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள், போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீண்டும் உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் மாதத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல, ஹிந்துஜா சகோதரர்கள் விடுதலையை எதிர்க்கும் வழக்கையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது என்கின்றன செய்திகள்.

நாட்டையே உலுக்கிய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையே, ஸ்தம்பித்துப் போனது. இதில், சர்வதேச ஆயுத தரகர்கள், தனியார் நிறுவனங்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் தொடர்பு உள்ளதாகக்கூறி, ஐரோப்பிய தொழிலதிபர்கள், ஹிந்துஜா சகோதரர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதனை கடந்த 2005ம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, ஹிந்துஜா சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக.,வைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் இதுபற்றி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதையேற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இதன்பேரில், விசாரணை நடத்தவும் முன்வந்துள்ளது. அக்டோபர் மாதம் இதுபற்றிய விசாரணை தொடங்க உள்ளதால், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ கூட இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications