போபர்ஸ் ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அக்டோபரில் மீண்டும் விசாரணை
இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் வழக்கை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள், போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீண்டும் உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் மாதத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல, ஹிந்துஜா சகோதரர்கள் விடுதலையை எதிர்க்கும் வழக்கையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது என்கின்றன செய்திகள்.

நாட்டையே உலுக்கிய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையே, ஸ்தம்பித்துப் போனது. இதில், சர்வதேச ஆயுத தரகர்கள், தனியார் நிறுவனங்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் தொடர்பு உள்ளதாகக்கூறி, ஐரோப்பிய தொழிலதிபர்கள், ஹிந்துஜா சகோதரர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதனை கடந்த 2005ம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, ஹிந்துஜா சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக.,வைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் இதுபற்றி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதையேற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இதன்பேரில், விசாரணை நடத்தவும் முன்வந்துள்ளது. அக்டோபர் மாதம் இதுபற்றிய விசாரணை தொடங்க உள்ளதால், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ கூட இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications