தேர்தல் சீர்திருத்தம்: பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
டெல்லி: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பன்வாரி லால் ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இங்கிலாந்தில் உள்ளதுபோல், வேட்பாளர்களைப் பற்றி வாக்காளர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் அவர் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகளை பாராட்டியதுடன் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.
நமது நாட்டின் மதிப்புகளும் சட்டங்களும் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகின்றன. எனவே, அதனை ஒப்பிடக்கூடாது. நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்துவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல் வழிமுறைகளை பார்த்து உலக மக்கள் பொறாமைப்படுகிறார்கள்.
நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் பிற நாடுகளின் தேர்தல் நடைமுறைகளைவிட வேகமாக உள்ளது. அமெரிக்காவில்கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications