பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

1996-2001 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துககு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. 2006ஆம் ஆண்டு பொன்முடியையும், 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ராஜனையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணையில் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதனை மீறி இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கவும், சுரேஷ் ராஜன் மீதான வழக்கை கடலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, ரகுபதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில் கடந்த மாதம் முன்னாள் அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications