நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் இருக்கலாமா.. உத்தரவை தளர்த்திய உச்சநீதிமன்றம்
நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
டெல்லி: சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலைக்கு இருபுறமும் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந்தேதிக்குள், அதாவது இன்றுக்குள், மூடுமாறு கடந்த டிசம்பர் 15ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனலா், இந்த உத்தரவில் திருத்தங்கள் செய்ய தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. வருமானத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட முடியாது என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அவ்வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முந்தைய உத்தரவில் தளர்வு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
20 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டர் தொலைவை 220 மீட்டராக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
விபத்துகளை குறைக்கும் வகையில், மக்கள் நலனுக்காகவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications