நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் இருக்கலாமா.. உத்தரவை தளர்த்திய உச்சநீதிமன்றம்
நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
டெல்லி: சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலைக்கு இருபுறமும் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந்தேதிக்குள், அதாவது இன்றுக்குள், மூடுமாறு கடந்த டிசம்பர் 15ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனலா், இந்த உத்தரவில் திருத்தங்கள் செய்ய தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. வருமானத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட முடியாது என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அவ்வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முந்தைய உத்தரவில் தளர்வு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
20 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டர் தொலைவை 220 மீட்டராக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
விபத்துகளை குறைக்கும் வகையில், மக்கள் நலனுக்காகவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications