ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் யாருமே ஹவுஸ் அரெஸ்ட் இல்லை- ஆளுநர் சின்ஹா திட்டவட்ட மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை துணை நிலை ஆளுநர் சின்ஹா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 Supreme Court verdict on Article 370: LG denies leaders House Arrest in Jammu Kashmir

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டு சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மெகபூபா முப்தியின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் படங்களை மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டிருந்தது.

 Supreme Court verdict on Article 370: LG denies leaders House Arrest in Jammu Kashmir

இதேபோல தாமும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா)வும் எக்ஸ் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டிருந்தார்.

 Supreme Court verdict on Article 370: LG denies leaders House Arrest in Jammu Kashmir

ஆனால் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சின்ஹா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் சின்ஹா கூறுகையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது. எந்த ஒரு தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை- கைது செய்யப்படவும் இல்லை. இது வதந்திகளை பரப்புகிற முயற்சிதான் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+