ட்விட்டரில் மகள் பற்றி பதிவான தகவலால் சுஷ்மா சுவராஜ் ஆத்திரம் !
டெல்லி : தனது மகள் பற்றி ட்விட்டரில் ஒருவர் தெரிவித்த கருத்தால் சுஷ்மா ஸ்வராஜ் ஆவேசமடைந்தார். பின்னர் அந்த கருத்து நீக்கப்பட்டுவிட்டது.
ஊழல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி தனது மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்ல இங்கிலாந்து தூதரகம் மூலம் விசா பெறுவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சுஷ்மா சுவராஜ் ஆதாயத்துடன் உதவியதாகவும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ட்விட்டரில் சுஷ்மா சுவராஜ் பற்றி, "சிலருக்காக சாதகமாக செயல்படுவது சுஷ்மா சுவராஜுக்கு புதிய விஷயம் அல்ல. தனது மகளைக் கூட அவர் வடகிழக்கு மாநில இடஒதுக்கீட்டில்தான் மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்தார்" என்று ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுஷ்மா சுவராஜ் உடனடியாக டுவிட்டரில் "எனது மகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் படித்தவர். நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான தகவல்" என்று பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து டுவிட்டரில் அவருடைய மகள் பற்றி பதிவான தகவல் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது.
எனினும் அந்த தகவல் மற்றவர்களால் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தொடர்ந்தது. இதுபற்றி சுஷ்மா சுவராஜின் ஆதரவாளர்கள், குரைக்கிறவர்களைப் பற்றி என்று ட்விட்டரில் ஆறுதல் அளித்தனர்.












Click it and Unblock the Notifications