பலாத்கார வழக்கில் “சஸ்பெண்ட்” - அவமானத்தில் எஸ்.பி தூக்குப் போட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: மேகாலயாவில் பலாத்கார வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் போலீஸ் குடியிருப்பில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார்.
மேகாலயா மாநில ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மதன் பாசுமட்டரி என்ற அந்த எஸ்.ஐ ஷில்லாங் நகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
அக்குடியிருப்பில் வைத்து ஒரு பெண்ணை அவர் பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த உள்ளூர் போலீசார், அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications