மமதாவுக்கு நெருக்கடி.. .ராஜினாமா செய்த அமைச்சர் சுவேந்து அதிகாரிக்கு பாஜக வலை- பரபரக்கும் மே.வங்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி, தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். இந்த திடீரென அமைச்சர் சுவேந்து அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி தலைவர்கள் தூது அனுப்பி வருகின்றனர். சுவேந்து அதிகாரி கட்சியை விட்டு எங்கேயும் செல்ல மாட்டார் என்றும், அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மாநில எம்.பி. சவுகாதா கூறினார். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிரடி ராஜினாமா
மேற்கு வங்க மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் இணைகிறாரா
கடந்த சில மாதங்களாகவே கட்சி தொடர்பான கூட்டங்களை தவிர்த்து வந்த அவர் பல்வேறு இடங்களில் கட்சியின் சின்னம், கொடி அல்லது பேனர் இல்லாமல் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். சுவேந்து அதிகாரி விரைவில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை மும்முரம்
எனவே கட்சியிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு உள்ள அவரை, தக்க வைக்ககட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர்களும் அவரை தங்கள் வசம் இணைக்க தூது அனுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளார்.

ஆதரவாளர்களுடன் தொடர்பு
மேற்கு வங்கத்தில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுவேந்து அதிகாரியின் ஆதரவாளர்கள் உள்ளதாகவும், அவர்களை ஒன்று திரட்டி சுவேந்து அதிகாரி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுவேந்து அதிகாரியின் சிக்னலுக்காக காத்திருபப்தாகவும், எங்களது ஆதரவாளர்கள் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள தயாராக இருபப்தாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

கதவுகள் திறந்து உள்ளன
இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகாதா ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவேந்து அதிகாரி கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டார். அவரிடம் சமாதானம் பேச கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. கட்சி தலைமைக்கும், அவருக்கும் உள்ள பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும் என நான் நம்புகிறேன் என்றார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications