லோன் தர மறுத்ததால் கர்நாடகா வங்கியையே கொள்ளையடித்த 'உசிலம்பட்டி பிரதர்ஸ்'- ரூ.13 கோடி நகைகள் மீட்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தாவணகெரே வங்கி கொள்ளை சம்பவத்தில் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளையும் கர்நாடகா போலீசார் மீட்டுள்ளனர்.
கர்நாடகாவின் தாவணகெரே நியாமதி டவுன் பகுதி பாரத ஸ்டேட் வங்கியின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

கர்நாடகாவை அதிர செய்தது தாவணகெரே கொள்ளை சம்பவம். இது தொடர்பாக நியாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கடந்த 6 மாதங்களாக எந்த துப்பும் துலங்க முடியாமல் கர்நாடகா போலீசார் ரொம்பவே திணறிப் போயினர்.
இந்த நிலையில் நியாமதியில் செயல்பட்டு வந்த பேக்கரி மூடப்பட்டே இருந்ததால் போலீசாரின் பார்வை அந்த பேக்கரி பக்கம் திரும்பியது. இதனையடுத்து பேக்கரி உரிமையாளரை பிடித்து விசாரித்ததில் வங்கி கொள்ளை முடிச்சுகள் அவிழ்ந்தன. பேக்கரியின் உரிமையாளர் உட்பட மொத்தம் 6 பேர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனையடுத்து வங்கி கொள்ளையர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரில் இருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அஜய்குமார், விஜய்குமார் என தெரியவந்துள்ளது. உசிலம்பட்டி சகோதரர்கள்தான், நியாமதியில் பேக்கரி நடத்திக் கொண்டே வங்கி கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுத் தந்தனர். தாவணகெரே வங்கியில் விஜய்குமார், 2 முறை வங்கி கடன் கேட்டிருந்தாராம். ஆனால் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்ததால் தம்பி மற்றும் உள்ளூநர் நபர்களை சேர்த்துக் கொண்டு வங்கியையே கொள்ளையடித்துள்ளார் விஜய்குமார். இவர்களிடம் இருந்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த இந்த நகைகள் அனைத்தையும் நியாமதி போலீசார் மீட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications