அயோத்தி ராமர் கோவிலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோவிலில் அண்மையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு அயோத்தி சென்றார். திறப்பு விழாவுக்குப் பின் முதல் முறையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி.

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, குடும்பத்துடன் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சென்றார். அயோத்தி ராமர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: "அயோத்தி தாமில் உள்ள பிரபு ஸ்ரீராமரின் பிரமாண்டமான புதிய கோயிலில் பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள எண்ணற்ற பக்தர்களுடன் சேர்ந்து பெற்ற பிரபு ஸ்ரீராமரின் தெய்வீக தரிசனம் ஒரு உணர்ச்சிகரமான தருணம். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். 500 ஆண்டுகால போராட்டத்தின் நீண்ட நசுக்கப்பட்ட கனவும் வெற்றிகரமான முடிவும் பக்தர்களின் கண்ணீர் நிறைந்த கண்களில் தெளிவாகத் தெரிந்தது. ஸ்ரீ ராமர் பாரதத்தின் ஆன்மா மற்றும் தேசிய சின்னம். அவர் மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இல்லாமல் அனைவராலும் நேசிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார். அயோத்தி தாமில் உள்ள ராமர் கோயில் நமது தேசிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். அதன் மகத்தான ஆற்றல் வளர்ந்து வரும் புதிய பாரதத்தின் எழுச்சியைத் தூண்டும். நம் மக்களின் நலனுக்காகவும், நம் தேசத்தின் விரிவான எழுச்சிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்." - ஆளுநர் ரவி. இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications