டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் கோட்டை விட்ட தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு ஊர்தி இல்லாதது ஏன்?
டெல்லி: குடியரசு தின விழாவில் ஜல்லிக்கட்டை தூக்கிப் பிடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டை வேண்டுமென்றே தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசார, பண்பாட்டு விழா என்பதால் அதற்கு தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும் புரட்சியையே நடத்தினர் தமிழக இளைஞர்கள்.
மெரினாவில் விழுந்த தீப்பொறி, தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பரவியது. ஒரு வாரம் நடைபெற்ற யுக புரட்சிக்கு பிறகு, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சட்டசபையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
|
ஒற்றுமை
தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்த தமிழினமும் ஒற்றுமையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், ஐரோப்பா என உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி தமிழர்கள் ஒற்றுமையை பறைசாற்றினர்.

எதிர்பார்ப்பு
இந்நிலையில்தான், இன்று குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கேற்றது. அதில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்தது.

கிராமத்து திருவிழா
தமிழர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கிராமத்து கோயில் திருவிழாவை கண்முன் காட்டும், காட்சிகள் ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. கரகாட்டம், நாதஸ்வர காட்சிகளும், பெரிய அம்மன் சிலை ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிலேயே காளையை இளைஞர்கள் அடக்குவது போன்ற காட்சி இருந்திருந்தால் இந்தியாவே அதை உற்று பார்த்திருக்கும்.

நல்ல வாய்ப்பு
தமிழக அரசுக்கும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அக்கறையுள்ளது என்ற ஒரு சமிக்ஞை தேசிய அளவில் பரவியிருக்கும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். வட இந்தியாவில் பலரும் ஜல்லிக்கட்டு என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆடப்படும் விளையாட்டு அல்லது மிருக வதை என நினைத்துக்கொண்டுள்ளனர். தமிழக அரசின் ஊர்தியில் ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றிருந்தால் சில தவறான புரிதல்களை அது மாற்ற உதவி செய்திருக்கும்.

இருட்டடிப்பா
இந்த விஷயங்கள் எல்லாம் தமிழக அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்காது. தெரிந்திருந்தும் வேண்டுமென்றே ஜல்லிக்கட்டு விஷயத்தை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இளைஞர்களின் புரட்சிக்கு மாநில அரசின் ஆதரவு இருந்ததாக கூறிக்கொள்ளும் அரசு அவர்கள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணி வகுப்பில் கரகாட்டத்தை காட்சிப்படுத்திவிட்டு, ஜல்லிக்கட்டு விவகாரத்தை மறக்கடித்துள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்திலுள்ள பல லட்சம் அளவிலான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications