நீட் தேர்வு விவகாரம்: மத்திய அமைச்சர்களை இன்று சந்திக்கின்றனர் தமிழக அமைச்சர்கள்!
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
டெல்லி: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகின்றனர். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவினர் கடந்த 20ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.
அப்போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லி சென்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவர்கள் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications