மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு – அழைப்பிதழ் அனுப்பி வரவேற்பு
அகமதாபாத்: மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் வதோதரா தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது மனுவினை முன்மொழிந்து வதோதராவில் டீக்கடை நடத்திவரும் கிரண் மஹிடா என்பவர் கையொப்பமிட்டார்.
இந்த தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றதையடுத்து வரும் திங்கட்கிழமை நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்கவுள்ள மோடி, இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வரும்படி, கிரண் மஹிடாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்த டீக்கடைக்காரர், நிச்சயமாக இந்த விழாவில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications