ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி! உமர் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர், 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக இந்த மாத துவக்கத்தில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநட்டு கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு சற்றும் குறைவான இடங்களை பிடித்த தேசிய மாநாட்டு கட்சி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெறாமல் உமர் அப்துல்லா அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. உமர் அப்துல்லா ஆட்சி அமைந்து முழுதாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அங்கு புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளகள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், தான் வெளி மாநில புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கராவதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், புலம் பெயர் தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

டெல்லியை அதிர வைத்த சம்பவம்.. மர்ம பொருள் எப்படி வெடித்தது? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மேலும் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல மருத்துவர் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள முதல் கட்ட தகவலின் படி ஒரு மருத்துவர் மற்றும் 5 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஆட்சி அமைந்த சில நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் கோழைத்தனமானது" என்று சாடியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications