தானேவில் 11 வயது சிறுமியை விரட்டிச் சென்று பலாத்காரம் செய்த 35 வயது நபர்

Subscribe to Oneindia Tamil

தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் வசாயில் உள்ள போய்தபதா பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் விஷ்வகர்மா(35). அவர் அதே பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். தனது மனைவி சமைக்காததால் தனக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது வீட்டில் சிறுமியும், அவரது தோழியும் தான் இருந்தனர். சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அந்நேரம் ராஜேஷ் வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியும், அவரது தோழியும் ஒருவகையாக ராஜேஷிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி ஒரு கடைக்குள் புகுந்துவிட்டனர்.

ராஜேஷ் அவர்களை பின்தொடர்ந்து சென்று 11 வயது சிறுமியை மட்டும் இழுத்து வந்து ஆசிரமம் ஒன்றின் அருகே இருந்த காலியான அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+