இந்தியா-அமெரிக்காவை உலுக்கிய பல கோடி ரூபாய் கால்சென்டர் மோசடி.. நடந்தது இப்படித்தான்!
மும்பை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால் சென்டர் மோசடி எப்படி நடந்தது என்கிற விவரம் அம்பலமாகியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த, 'கால் சென்டர்' மூலம், அமெரிக்க நாட்டை சேர்ந்த பலர், பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியில், மூன்று கால் சென்டர்களில், தானே போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி மோசடியை கண்டுபிடித்தனர்.

மிரா ரோடு பகுதியில் உள்ள மூன்று கால் சென்டர்களில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட, 600க்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போன்ற ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், அமெரிக்க நாட்டினரை, போனில் தொடர்பு கொண்ட இவர்கள், தங்களை அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறியுள்ளனர்.
பின், "நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள். உங்களை கைது செய்ய காவல் துறை தயார் நிலையில் உள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்" எனக், கூறியுள்ளனர். இதனால் பயந்த பலர், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். ஓராண்டுக்கும் மேலாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது.
ஒரே நேரத்தில் 10 பேரை தொலைபேசியில் அழைக்கும் வகையிலான தொழில்நுட்ப சாப்ட்வேர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. போன் அழைப்பை பெறுவோருக்கு, அது அமெரிக்க உள்நாட்டு போன் நம்பர் போலத்தான் தெரியும். எனவேதான் அவர்களும், கால் சென்டர் ஊழியர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் என நம்பி ஏமாந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வழியாக எதிர்முனையில் பேசுபவர்களின் பெயர், பதவி, தொழில் குறித்த தகவலை தெரிந்து கொண்டு, அதிகமாக யாரிடம் பணம் இருக்கும் என கருதுகிறார்களோ அவர்களை மட்டும் தேர்வு செய்து ஏமாற்றியுள்ளது கால் சென்டர் கும்பல். சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் ஷேர் ஆவதால் நேர்ந்த எதிர்மறை விளைவு இது என கூறப்படுகிறது.
இதுவரை சுமார் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளதாக போலீசார், தானே கோர்ட்டில் இன்று தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறை, மும்பை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ரெய்டு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications