சபரிமலை மண்டலபூஜை : ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம்
சபரிமலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டது.
பத்தனம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டது.பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா 453 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கினார். மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும் அந்த அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று காலை தங்க அங்கி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாகப் புறப்பட்டது. இன்று மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு 23ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
25 ஆம் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வந்து சேரும் தங்க அங்கியை மேள, தாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வர். அன்று மாலை சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து 18 ஆம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மண்டல பூஜை விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஐயப்பனை தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முதல் இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. சபரிமலை கோவிலில் பக்தர்கள் நேரடியாக வழிபடும் நெய் அபிஷேக நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கோவிலில் படி பூஜையும் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவிலுக்கு வருவாயும் அதிகரித்து உள்ளது. உண்டியல், வழிபாடு மற்றும் பிரசாத விற்பனை மூலம் இதுவரை கோவிலுக்கு ரூ.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அப்பம், அரவணை விற்பனை மூலம் மட்டும் ரூ.27 கோடி கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
சபரிமலை ஐயப்பனுக்கு வரும் 25ஆம் தேதி மண்டல பூஜை முடிந்ததும், மகர விளக்கு திருவிழா தொடங்குகிறது. ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications