For Daily Alerts
Just In
காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி
Recommended Video
காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ
டெல்லி: காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரிக்கு கர்நாடகா உரிமை கொண்டாடும் நிலையில் அதிரடியாக இந்த கருத்தை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் இந்த வரிகளை நீதிபதிகள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
மேலும், தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. இதை 132 டிஎம்சி தண்ணீராக குறைக்க கர்நாடகா வலியுறுத்தியிருந்தது.
Comments
cauvery supreme court tamilnadu karnataka pudhucherry kerala verdict காவிரி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கர்நாடகா புதுவை கேரளா தீர்ப்பு
English summary
The Supreme Court has directed Karnataka to provide 177.25 TMC water to the State of Tamil Nadu.