நாளை முதல் டோல்கேட்களில் மீண்டும் கட்டணம் வசூல்.. பழைய 500 கொடுப்பதற்கு புது ரூல்ஸ்! கியூ கேரண்டி
டெல்லி: நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் பணமாக கட்டணம் செலுத்துவதில் புதிய கட்டுப்பாடு அமலாகிறது.
புழக்கத்திலிருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து, சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு சில்லரை கொடுக்க முடியாத நிலை உருவாகி பெரும் கியூவை அது ஏற்படுத்தியது. எனவே நவம்பர் 11ம் தேதிவரை சுங்க கட்டணம் கிடையாது என மத்திய அரசு முதலில் அறிவித்தது.

சில்லரை தட்டுப்பாடு நீடித்ததால், பிறகு அது நவம்பர் 14 வரையிலும், பிறகு நவம்பர் 18 வரையிலும், பிறகு நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 2 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் இதில் நீட்டிப்பு செய்யாத மத்திய அரசு, டிசம்பர் 2ம் தேதியான நாளை இரவு முதல் மீண்டும் சுங்க கட்டணத்தை பெற முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அதிலும் ஒரு விதிமுறையை புகுத்தியுள்ளது நெடுஞ்சாலைத்துறை. அதாவது, ரூ.200க்கு மேல் சுங்க கட்டணம் கட்ட வேண்டியிருந்தால் மட்டுமே பழைய ரூ.500 ஏற்கப்படும். ரூ.200க்கு கீழுள்ள கட்டணங்களுக்கு சில்லரையாகவே பணத்தை கொடுக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது.
அரசின் அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் கியூவில் நிற்க வேண்டிய நிலை வரலாம். ஏனெனில் மக்கள் கையில் இப்போது சில்லரை நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. புதிய 2000 நோட்டுக்கள்தான் கணிசமாக உள்ளது. இதை கொடுத்து சில்லரை பெறும் நேரத்திற்குள் டோல்கேட்டுகளில் கூட்டம் அலைமோதும். இது மீண்டும் பெரும் நெடுஞ்சாலை நெரிசலை ஏற்படுத்திவிடும்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications