ஜெ. வழக்கில், சு.சுவாமி, அன்பழகன் அப்பீல் செய்ய முடியுமா?
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியோ அல்லது க.அன்பழகனோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமையுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஹைகோர்ட்டில் ஜெயலலிதா விடுதலையாகியுள்ள நிலையில், கர்நாடக அரசுக்குதான் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முதல் உரிமை உள்ளது. இதை கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரும் உறுதி செய்தார்.

அணுகலாம்
ஆனால், கர்நாடக அரசு சில காரணங்களால் மேல்முறையீடு செய்யாவிட்டால், சுப்பிரமணியன் சுவாமியோ அல்லது அன்பழகனோ உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

இருவர் பங்கு
சுப்பிரமணியன்சுவாமி, இந்த வழக்கை முதலில் தொடுத்தவர் என்ற முறையிலும், அன்பழகன், இந்த வழக்கின், சக வாதி என்ற முறையிலும், மேல்முறையீடு செய்ய முயற்சி செய்யலாம்.

ஹைகோர்ட்டில் பெரும்பாடு
ஆனால், இதில் உச்சநீதிமன்றம்தான் இறுதி முடிவை எடுக்க முடியும். ஏனெனில், உச்சநீதிமன்றத்தின் விருப்பத்தை பொருத்தது அது. ஹைகோர்ட்டில் இவ்விருவரும் தங்களை வாதிகளாக சேர்க்கச் சொல்லி, கடும் பிரயத்தனம் செய்தனர். அதன்பிறகே நீதிபதி வாய்ப்பு கொடுத்தார்.

அதிருஷ்டம் தேவை
அதுவும், எழுத்துப்பூர்வ வாதத்துக்குதான் வாய்ப்பு கிடைத்தது. எனவே உச்சநீதிமன்றத்தில், இவர்கள் இருவரும் முயன்றாலும், அதிருஷ்டம் இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். சுப்பிரமணியன்சுவாமி, தனது அதிருஷ்டத்தை சோதித்து பார்க்க ரெடியாகிவிட்டது அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது. அன்பழகன் தரப்பு வாய் திறக்கவில்லை, இதுவரை.












Click it and Unblock the Notifications