டாக்சியில் தூங்கிய இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது இது நடந்தது... வீடியோ இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிர்பயா வழக்கில் கைதான மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பலாத்காரம் பற்றிய குறும்பட வீடியோ ஒன்று தீயாக பரவியுள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் பலியான நிர்பயா வழக்கில் கைதான மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்காரம் பற்றிய குறும்படம் ஒன்று வெளியாகி அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது.

வீடியோவின் விபரம்,

இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் கேப் புக் செய்து அதில் பயணிக்கிறார். கேபில் ஏறிய வேகத்தில் அவர் அசதியில் தூங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு டிரைவர் தனது வாகனத்தை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு ஓட்டிச் செல்கிறார்.

ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு அவர் பின்பக்க கதவை திறந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயல்கிறார். அந்த நேரம் பார்த்து ரேடியோவில் பேசிய ஆர்.ஜே. எது வேண்டுமானாலும் செய்யுங்கள், பலாத்காரம் மட்டும் செய்யாதீர்கள். பலாத்காரத்திற்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் இறுதி செய்துவிட்டது. அந்த தண்டனை சட்டம் இன்றே அமலுக்கும் வந்துவிட்டது என்கிறார்.

இதை கேட்ட டிரைவர் மனதை மாற்றிக் கொண்டு அந்த பெண்ணை விட்டுவிட்டு வாகனத்தை ஓட்டுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+