Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புல்லரிக்க வைக்கும் தெலுங்கானா நகரம்.. ஊரே கூடி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் அதிசயம்..!

தெலுங்கானாவின் ஜம்மிகுண்டா நகரத்தில் தினமும் தேசியக் கீதம் இசைக்கப்படுகிறது. நகரமே ஒட்டுமொத்தமாக சல்யூட் செய்து வணங்குகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஜம்மிகுண்டா நகரத்தில் தினமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவது அப்பகுதி மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகிறது.

கடந்த சுதந்திர தினத்தின்போது ஜம்மிகுண்டா நகரில் தேசியக் கொடியை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முயற்சியின்பேரில் அன்று முதல் தினமும் அப்பகுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

ஒலிபெருக்கிகள் மூலம் காலை 8 மணிக்கு இசைக்கப்படும்போது அவ்வழியாக செல்வோர், அங்கு கடை வைத்திருப்போர், வீட்டில் உள்ளவர்கள் என அனைவரும் தேசிய கீதத்தை மிகுந்த தேசப்பற்றுடன் நின்று பாடி வருகின்றனர்.

பள்ளி குழந்தைகள்

பள்ளி குழந்தைகள்

இதுகுறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்துக்கு பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி கூறுகையில், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேசிய கீதம் குறித்து பெரும்பாலும் தெரிவதில்லை. அவர்களின் தேசப்பற்றை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

தினமும் தேசிய கீதம்

தினமும் தேசிய கீதம்

அப்போது உதித்தது தான் தினமும் தேசிய கீதம் இசைப்பது என்ற திட்டம். ஜம்மிகுண்டா நகரில் 16 முக்கிய சந்திப்புகளில் முதலில் தேசப்பற்று கொண்ட பாடல்களை காலை 7.45 மணிக்கு இசைக்க தொடங்கினோம்.

நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள்

தற்போது நாட்டில் நிகழும் விவகாரங்கள் குறித்து நான் பேசுவேன், பின்னர் தேசிய கீதமானது இசைக்கப்படும். இச்சமயத்தில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் நின்று தேசிய கீதத்தை பாடுவர்.

பேதமில்லை

பேதமில்லை

ஜாதி, மத, மொழி, இனம் என எவ்வித பேதமுமின்றி தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் ஆங்காங்கே நின்றபடி எவ்வித சிரமமும் பார்க்காமல் மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல் தேசிய கொடிக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குற்றங்கள் குறையும்

குற்றங்கள் குறையும்

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மரியாதை கொடுக்கும்போது தேசப்பற்று வளருவதோடு குற்றங்களைத் தடுக்கவும் இது ஒரு ஆயுதமாகிறது. அனைத்து மக்களும் ஒரே இடத்தில் கூடுவதால் அவர்களது உறவுகள் வலுப்படும். அந்த இடத்தில் கெட்ட எண்ணங்கள் ஒழிக்கப்பட்டு நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்றார்.

மக்கள் வரவேற்பு

போலீஸாரின் இந்த முயற்சியை மக்கள் வரவேற்கின்றனர். ஜம்மிகுண்டா போலீஸாரின் நல்ல முயற்சி என்கின்றனர். தாய் நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது சிறந்த முயற்சி என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+