காப்பகத்தில் கொடுமையான முறையில் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் பலி.. உரிமையாளர் கைது!
மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
Recommended Video

போபால்: மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனியார் சிறுவர்கள் காப்பகம் ஒன்று அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2003 ல் இருந்து 42 சிறுவர்கள் மற்றும் 58 சிறுமிகள் தங்கி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நான்கு ஆசிரியர்கள் இருந்த காப்பகத்தில் முழு நேரமும் வார்டன்களாக காப்பகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார்.

காப்பகங்களில் சோதனை
இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் காப்பகங்கள், தங்குமிடங்கள் மற்றும் அனாதை இல்லங்களை சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும் தனியார் பெண்கள் விடுதிகளுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

விசாரணை
இதைத்தொடர்ந்து காப்பகங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வந்தது. இந்நிலையில் போபாலில் உள்ள காப்பகம் ஒன்றில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் அங்குள்ள சிறுவர் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

கொடுமையான பலாத்காரம்
அதில் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் கொடுமையான பலாத்காரத்தால் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மூன்று சிறுவர்கள் பலி
காப்பகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதால் அதிகப்படியான இரத்தப்போக்கில் சிறுவன் ஒருவன் இறந்து உள்ளான் . மற்றொருவன் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளான். மூன்றாவதாக ஒரு சிறுவன் கடும் குளிரில் இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்ததால் இறந்ததாக அங்கு தங்கியுள்ள சிறுவர்களும், சிறுமிகளும் புகார் அளித்து உள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு
காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும் இதுதொடர்பாக சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் புகாரை அளித்துள்ளனர். இந்த புகாரை சமூக நீதித்துறை போலீசுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

உரிமையாளர் கைது
பாலியல் பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காத சிறுவர் சிறுமிகள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் காப்பகத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காப்பக உரிமையாளரான 70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications