ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த மேலும் 3 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேலும் 3 இந்தியர்கள் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். மற்ற 6 பேரும் ஈராக், சிரியாவில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Three More Indians Join IS Ranks

தற்போது ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3 இந்தியர்களில் ஒருவர் காஷ்மீரில் பிறந்த ஆஸ்திரேலியர் ஆவார். மற்ற இருவரும் சிங்கப்பூர் மற்றும் ஓமனில் வசித்து வந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த இருவரும், பெங்களூர், தெலுங்கானாவைச் சேர்ந்த 2 பேரும் ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சேர்ந்துள்ள 3 இந்தியர்களும் இணையதளம் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு சேர்க்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+